in

திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா


Watch – YouTube Click

திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய தீ பாதுகாப்பு வார விழா நடந்தது.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த தீ தடுப்பு வார விழாவிற்கு துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஷிரிஷ்குமார் பாதுகாப்பு மற்றும் சேவையின் கொடியை ஏற்றி வைத்து தீ பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் துப்பாக்கியை தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீ பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு தொழிற்சாலை, வீடுகள், பொது இடங்களில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் தங்களையும் தொழிற்சாலைகளையும்பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

மேலும் ஆலை வளாகத்தில் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் தீ தடுப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று தீ தடுப்பு மற்றும் பாதுகாப்புசம்பந்தப்பட்ட அறிவுகளை தாங்கள் வளர்த்துக் கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியினார்கள்.

அப்பொழுது தீ விபத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களை எப்படி பத்திரமாக பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

காங்கிரசை கண்டு மோடி பயப்படுகிறார் அதனால் காங்கிரசை அழிக்க நினைக்கிறார்

நம்ம சாமியார் ரங்கசாமிக்கு குடிதண்ணீர் பற்றி தெரியாது சாராயத்தை பற்றி மட்டுமே தெரியும்