in ,

ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்


Watch – YouTube Click

ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராகி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ உன்மத்த வாராஹி அம்மனுக்கு பங்குனி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் சுவாமியை மனதார வழிபட்டு சென்றனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சிவாச்சாரியார் மற்றும் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார்

புதுவை இந்தியன் எக்ஸ்சர்வீஸ் லீக் நலச்சங்கத்தின் உலக மகளிர் தின விழா