in

திருநெல்வேலி மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் அறிவிப்பு


Watch – YouTube Click

திருநெல்வேலி மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் அறிவிப்பு

 

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 51 மாவட்ட உறுப்பினர்கள் உள்ளனர் அதிமுகவை சேர்ந்த 4 பேர் மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மாநகராட்சியின் மேயராக திமுகவின் சரவணன் பணியாற்றி வருகிறார்.

துணை நேராக ராஜு செயல்பட்டு வருகிறார் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே மேயர் சரவணனுக்கும் ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. மாமன்ற கூட்டங்களிலும் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சார்ந்த மாமன்ற உறுப்பினர்களே மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து கட்சி தலைமை தலையிட்டு மாமன்ற உறுப்பினர்களை மதுரை உள்ளிட்ட வேறு நகரங்களுக்கு அழைத்துச் சென்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் செய்தனர்.

அதன் மூலம் அவரது பதவி காப்பாற்றப்பட்டது கட்சி மேலிடம் பலமுறை மாமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. அவர்கள் கட்சி கட்டுப்பாடுகளை மீறி அவர்களுக்குள் ஒரு குழு அமைத்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் எனவும் அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது மாலை 4 மணி அளவில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கூட்ட அரங்கிற்கு வந்து காத்திருந்த நிலையில் நான்கு முப்பது மணிக்கு மேயர், துணை மேயர் மற்றும் நான்கு மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் எவரும் வராத நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருவர் அதிமுகவை சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் வந்திருந்தனர் போதிய மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை (கோரம்) இல்லாததால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது

பட்ஜெட் கூட்டம் ஐந்து மணிக்கு நடைபெறும் என மேயரால் அறிவிக்கப்பட்டு நிலையில் 5:30 மணியை தாண்டியும் போதுமான எண்ணிக்கையில் மாமன்ற உறுப்பினர்கள் வரவில்லை. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் வேறொரு தேதியில் நடத்தப்பட உள்ளதாகவும் அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மேயர் சரவணன் அறிவித்தார், இதனிடையே கடந்த கூட்டத்தின் போது எனது வார்டில் நடக்க உள்ள பணிகள் குறித்த தீர்மானம் ஏன் ரத்து செய்யப்பட்டது என காங்கிரஸ் உறுப்பினர் அனுராதா கேள்வி எழுப்பினார்.

அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் 4 மணியிலிருந்து கூட்டம் நடைபெறும் என காத்திருக்கிறோம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் தற்போது சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் பட்ஜெட் கூட்டம் வேறொரு தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் பிரச்சினை குறித்து மாமன்றத்தில் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை இதனை அதிமுக உறுப்பினராக ஆகிய நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன் என பேசினார்.

திமுக மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் மக்கள் பணி நடைபெறாமல் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அரசு மருத்துவமனை புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா

தீ விபத்து வதந்தி அலறி அடித்து ஓடியதில் ரயில் மோதி 2 பேர் பலி