in

அதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதிகள்


Watch – YouTube Click

அதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதிகள்

 

செஞ்சி அருகே சாலையில் சென்ற வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதிகள்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி வழியாக மழுவந்தாங்கல் செல்லும் சாலையில் மணலப்பாடி என்ற இடத்தில் வேகமாக சென்ற டாடா சுமோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் மின்கம்பம் இரண்டாக உடைந்து சாலையின் குறுக்கே மின் ஒயர்கள் அருந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை நிறுத்தி வைத்து மின் வினோகம் நிறுத்தப்பட்டது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னையில் வசித்து வரும் சின்னதுரை என்பவர் தனது சொந்த ஊரான மழவந்தாங்கல் கிராமத்திற்கு தனது டாட்டா சுமோ வாகனத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆலம்பூண்டி மழவந்தாங்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மணலப்பாடி என்ற இடத்தில் வாகனம் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக தனது இரண்டு குழந்தைகளுடன் சிறு காயம் இன்றி உயிர் தப்பினார்.

அங்கிருந்தவர்கள் வாகனத்தில் சிக்கி தவித்தவர்களை வாகனத்தின் முன் பக்கம் வழியாக மீட்டனர்.

சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் சாலையின் குறுக்கே அறுந்து கிடந்த மின் கம்பங்களில் இருந்து ஒயர்களை துண்டித்து அப்புறப்படுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சத்தியமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கில்லி கொண்டாட்டத்துடன் பொழுது விடிந்துள்ளது… த்ரிஷா போஸ்ட்

மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற புதுச்சேரி திருநங்கை