in

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியினை ஜான் குமார் எம்எல்ஏ வழங்கினார்


Watch – YouTube Click

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியினை ஜான் குமார் எம்எல்ஏ வழங்கினார்

 

புதுவை அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பாத்திமா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியினை முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்எல்ஏ வழங்கினார்.

புதுச்சேரி அரசு சார்பில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

பள்ளி முதல்வர் அருட்தந்தை மகிமை தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வரின் பாராளுமன்ற செயலரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜான் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுகவையும் விற்பனை செய்வதில் திமுகவினர் ராஜதந்திரிகள் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் குற்றச்சாட்டு

மத்திய அணுசக்தி துறையின் சார்பில் புதுப்பட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரம் ஆர்.ஓ. வாட்டர் இயந்திரம்