in

வாக்களித்த பின்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி


Watch – YouTube Click

வாக்களித்த பின்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

 

புதுச்சேரில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் வாக்குரிமையை செலுத்த வேண்டியது அனைவரின் கடமை.

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர சகோதரி வாக்குகளை தவறாமல் பதிவு செய்து தங்களுடைய ஜனநாயக கடமையான வாக்குளை பதிவு செய்து இந்திய சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்குமான தேர்தல்.

இதுவரை மக்கள் சக்தி தான் வென்றுள்ளது. இந்த முறையும் மக்கள் சக்தி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வருவார் என்றார். பாஜக பணத்தை வாரி இரைக்கிறது. ஆனால் மக்கள் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளவில்லை ஏனென்றால் ஊழலை எதிர்க்கின்றனர் என்றார்.

புதுச்சேரியிலும் பணபலமா? மக்கள் பலமா என்ற நிலை உள்ளது. மக்கள் பலம் எங்கள் பக்கம் உள்ளது. பணம் பலம் முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோரிடம் உள்ளது.

நாங்கள் வெற்றி பெறுவோம். ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் நமது வேட்பாளர் வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறுவார் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் குடும்பத்துடன் வாக்கு பதிவு

அரசியலை விட்டு விலகுகிறேன் – அண்ணாமலை பேட்டி