in

என் வாழ்க்கையை காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிடேன்

என் வாழ்க்கையை காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிடேன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மாயாவின் அட்ராசிட்டியால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பாதிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிரதிப் போட்ட கண்டிஷனால் ஆண்டவர் ஆட்டம் கண்டு சைலன்டாகி விட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஒரு ஆர்மியே உருவானது இவருக்கு நியாயம் கேட்டு பலர் இவருக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.

இந்நிலையில் பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் அந்த நாள் ஞாபகத்தை நினைவூட்டும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

எனக்கு 34 வயசு ஆயிடுச்சு திரும்பி நான் பார்த்தேனா என் வாழ்க்கையை காசை தவிர எல்லாத்தையும் சம்பாதிச்சிடேன்.... இருந்தாலும் எனக்கு நல்ல சாப்பாடு போட்டு படிக்க வைத்து இன்னும் என்னுடைய பேஷனுக்காக (passion) சப்போட்டா இருக்கிற என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன்.

பிரதீப்பின் இந்த பதிவினை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி நீங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிப்பீர்கள் என்று நம்பிக்கையும் கூறி இருக்கிறார்கள்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பிரதிப்பை வளர்த்தது அவரது சித்தி தானாம் என்னை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல தடவை அவரது சித்திக்கு கோரிக்கை வைத்திருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

What do you think?

எனக்கு ஒரே மாதிரி நடித்து போர் அடித்து விட்டது….அதனால் தான் இந்த புது ரூட்

சரியும் மார்க்கெட்… புகையும் அனிருத்