in

தனது சொந்த ஊரில் வாக்களித்தபின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


Watch – YouTube Click

தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாகவும், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் விதமாகவும் மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள் – தனது சொந்த ஊரான மல்லாங்கிணர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தபின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது மனைவி மணிமேகலை மற்றும் தனது மகள்கள் மற்றும் இதயாவுடன் இமையாவுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.இதில் அவரது இளைய மகள் இமையா அமெரிக்காவில் படித்து வருகிறார்.அவர் இம்முறை முதல்முறையாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,நாட்டு மக்கள் மிக தெளிவான ஒரு முடிவை வழங்க காத்திருக்கிறார்கள் என்றும்
மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாவது அவசிய தேவைகளாக மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்றும் தமிழக முதல்வரின் நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கும் விதமாகவும், ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் விதமாகவும் மக்கள் காலை முதல் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள் என்றார்


Watch – YouTube Click

What do you think?

102 வயது கூன்விழுந்த கிழவி ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினார்

மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் வாக்களித்தார்