in

போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்


Watch – YouTube Click

போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செங்கோட்டையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

இதேபோல, தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி MLA அறிவுரையின் பேரில், தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில், நகரசெயலாளர் கணேசன் முன்னிலையில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே செங்கோட்டை நகர கழகம் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஜாகீர் உசேன், நகர எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி
செயலாளர் சக்திவேல் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு,போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து எழுதுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல செங்கோட்டை ஒன்றியம், புதூர் பேரூர் கழகம் சார்பில் கேசவபுரத்தில், ஒன்றிய செயலாளர் ஆய்க்குடி செல்லப்பன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் புதூர் பேரூர் செயலாளர் பாலசுப்ரமனியன், துணை செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோஷமிட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சிஏஏ விவகாரம் எடப்பாடி பழனிசாமி பல்டி

ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம்