in

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் ஆட்சியர்


Watch – YouTube Click

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் ஆட்சியர்

 

கடலூர் மாவட்ட ஆட்சியர். DR. திரு அருண் தம்புராஜ் IAS அவர்கள் குறிஞ்சி பாடி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் படி கள ஆய்வு பணியை மேற்கொண்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்று புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் இன்று சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், இவ்ஆய்வு ஒவ்வொரு ஆட்சியரும் ஒவ்வொரு மாதம் கடைசி புதன்கிழமை அன்று வட்டளவில் கள ஆய்வில் ஈடுபட அறிவுறுத்தியதற்கிணங்க  (31.01.2024)குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும்.

திட்ட பணிகள், குறிஞ்சிப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஆடூர்அகரம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், குறிஞ்சிப்பாடி ரங்கநாதபுரம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு இல்லம், கருங்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

தனுஷ் நடிக்கவிருக்கும் டிஎன்எஸ் தயாரிப்பாளர்கள் மீது புகார் ..படப்பிடிப்பு ரத்து

ஜார்க்கண்ட் முதல்வர் கைது? மனைவி முதல்வராகிறார்