in

தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் – பேட்டி புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்


Watch – YouTube Click

தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் – பேட்டி புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 979 பெண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 569 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 151 பேரும் உள்ளனர்.

இதில் முதல்முறை வாக்காளர்கள் 28 ஆயிரத்து 921 பேர் உள்ளனர். 80 வயதுக்கு மேல் 38 ஆயிரத்து 684 பேரும், 85 வயதுக்கு மேல் 8 ஆயிரத்து 31 பேரும், 100 வயதுக்கு மேல் 97 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 141 பேரும் உள்ளனர். சேவை வாக்காளர்கள் 325 பேரும், வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 368 பேரும் உள்ளனர். இரண்டு மாநில வாக்காளர்களாக கருதப்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.

புதுச்சேரியில் மொத்தம் 967 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 180, காரைக்காலில் 35 என 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கூறிய குலோத்துங்கன், பத்து சாவடிகள் அதிமுக்கியமானவை.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் காமிரா பொருத்தி கண்காணிக்கப்படும் என்றார்.  வங்கி தரப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டு அதில் 3.47 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது. கலால்துறையில் 110 வழக்குகள் பதிவாகி 41 பேர் கைதானார்கள். அபராதமாக ரூ. 6.38 லட்சம் போடப்பட்டுள்ளது. ரூ. 3.6 லட்சம் மதிப்புள்ள 996 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.

வீட்டில் இருந்து வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 1609 முதியோரும், 1322 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தோர் 2931 பேரின் வீடு தேடி சென்று வாக்கு பெறும் பணிகள் வரும் ஏப்ரல் 2ல் துவங்கும் என்றும் தபால் வாக்கு அளிக்க சேவை வாக்காளர்கள் 325 பேரும், அத்தியாவசிய பணிகளில் இருக்கும் 43 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்றும் குலோத்துங்கன் தெரிவித்தார்.

கட்டணமில்லா 1950 தொலைபேசி மூலம் 248 புகார்கள் வந்தன. 31 புகார்கள் தீர்வு காணப்பட்டன. வாட்ஸ்அப்பில் 20 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 10 புகார்களும் வந்தன என கூறிய அவர், வாக்குச்சாவடி அதிகாரிகள் 4 ஆயிரம்பேர் போதியளவில் உள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலான பிறகு பேனர், போஸ்டர், கொடி கம்பம், சுவர் விளம்பரங்கள் ஆகியவை 24,055 அகற்றப்பட்டன என்றும் பூத் சிலிப் ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 12க்குள் வீடு, வீடாக வந்து தரப்படும்.

பாதுகாப்பு பணிகளுக்காக புதுச்சேரி மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎப்) இரண்டு கம்பெனிகள் வந்துள்ளன. இன்னும் பத்து கம்பெனிகள் ஏப்ரல் முதல்வாரத்தில் வரவுள்ளன என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

வேட்பு மனுவில் குளறுபடி அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை இடிந்ததில் மூவர் பலி