in

விவசாயிகள் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்… ஆடுகளம் கிஷோர்

விவசாயிகள் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்… ஆடுகளம் கிஷோர்

விவசாயிகள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு தமிழில் வட சென்னை, ஆடுகளம் ஆகிய படத்தில் நடித்துள்ள கிஷோர் தனது ஆதரவை தெரிவித்து, இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 விவசாயிகள் நியாயமான விலை கேட்பது அநியாயமா தெரிகிறது, அதிகபட்ச விலை என்று உறுதி அளித்து தான் ஆட்சிக்கு வந்தனர், அவர்கள் விளைவித்த உணவை தின்றுவிட்டு இப்பொழுது விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றனர்.

சாலைகளை தோண்டினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் இவர்களை எல்லாம் மோடி அரசு என்ன செய்தது, ஆனால் தேசத் துரோகிகள் என்ற முத்திரை விவசாயிகள் மீது விழுந்து உள்ளது.

மோடிக்கு அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும். ஆனாலும் நன்றி இல்லாமல் விவசாயிகள் மேல் கண்ணீர் புகை வீசிய காவல்துறையினருக்கும் விவசாயிகள் உணவளிக்கிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்.

What do you think?

இந்த படம் நிச்சயம் உலக அளவில் கொண்டாடப்படும்…படக்குழுவின் நம்பிக்கையை காபாற்றுவார்களா ரசிகர்கள்

தாதா சாகேப் பால்கே விருதை பெற தகுதியற்ற படம்…