in

திமுகவின் செயற்குழு கூட்டம் – ஆட்சியர் நீடித்தால் – 50 ஆயிரம் வாக்குகள் குறையும்


Watch – YouTube Click

திமுகவின் செயற்குழு கூட்டம் – ஆட்சியர் நீடித்தால் – 50 ஆயிரம் வாக்குகள் குறையும்

 

நாடாளுமன்ற தேர்தல் தேதியை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் காத்திருக்கிறது. இன்னும் 15 முதல் 20 தினங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் அமைப்புகள் தேர்தல் தொடர்பான பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

பல்வேறு அணிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிர்வாகி ஒருவர் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் அதற்காக நாம் உழைக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய ஆட்சியரை மாற்ற வேண்டும் அவர் தொடர்ந்து நீடித்தால் 50 ஆயிரம் வாக்குகளை நாம் இழக்க நேரிடும் என அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி நிர்வாகங்களில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்படுவதை இதுபோன்ற நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆளும் கட்சியினரே மாவட்ட ஆட்சியர் நீடித்தால் கட்சிக்கு 50 ஆயிரம் வாக்குகள் குறையும் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நமது கட்சி வசமே உள்ளது.

நமது தலைவர்கள் உறுப்பினர்கள் பொதுமக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் வாக்கு சேகரிக்க செல்லும்போது பொதுமக்கள் குறை கூறும் அளவில் இருக்கக் கூடாது என பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…

தேர்தல் பத்திர முறை ரத்து