in ,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…


Watch – YouTube Click

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு இன்று தமிழக முன்னால் முதல்வர் ஓ.பன்னீர செல்வம் சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.

கோவிலுக்கு வந்த அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் தனது குடும்பத்தினரோடு ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் . ஆண்டாள் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தார்.

பின்னர் கோவிலில் கொடி மரத்தை வணங்கி கோயிலுக்குள் சென்று ஆண்டாள் ரெங்க மன்னாரை சாமி தரிசனம் செய்தார்.

ஓபிஎஸ்- இன் மனைவி இறந்து நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்ததால் இன்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கும் ஆண்டாள் கோயில் சாமி தரிசனம் செய்துவிட்ட பின்னர் தனது குலதெய்வம் கோயிலான செண்பகதோப்பு வன பேச்சி அம்மன் கோயிலுக்கு சிறப்பு பூஜை செய்ய புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக ஆண்டாள் கோவிலில் வைத்து செய்தியாளர்கள் பேட்டி கேட்டதற்கு, இன்று ஒரு நாள் பேட்டிக்கு விடுமுறை என நகைச்சுவையாக பதில் அளித்து விட்டு சென்றார்.


Watch – YouTube Click

What do you think?

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும்

திமுகவின் செயற்குழு கூட்டம் – ஆட்சியர் நீடித்தால் – 50 ஆயிரம் வாக்குகள் குறையும்