இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த கோரியும் சிங்க பெண் அதிரடி படையை விரிவுபடுத்த கோரியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் இந்திய தேசிய சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் மகளிர் சம்மேளனம் மாவட்ட தலைவர் மோனிஷா தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த கோரியும் சிறுமிகள் குழந்தைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்க கோரியும் சிங்க பெண் அதிரடிப்படையை விரிவுபடுத்தக்கோரியும் முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார் ஆர்ப்பாட்டத்தில் 100 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.


