in

மோடி ஆட்சியை விமர்சித்து பக்கோடா மற்றும் அல்வா வழங்கி பிரச்சாரம்


Watch – YouTube Click

மோடி ஆட்சியை விமர்சித்து பக்கோடா மற்றும் அல்வா வழங்கி பிரச்சாரம்

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் ஒன்றிய மோடி அரசு ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத்தை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் பக்கோடா மற்றும் அல்வா ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸூக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
மோடி தலைமையிலான அரசு பத்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை தரவில்லை, இதில் திருநெல்வேலி மக்களுக்கு மோடி அல்வா கொடுத்துவிட்டார், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தராமல் மோடி அரசு பக்கோடா விற்க அறிவுறுத்தியது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாது 25 கோடி ரூபாய் கடன் பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி எந்தவித வாக்குறுதி நிறைவேற்றாமல் மோடி பொது மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளார் இதை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாளையங்கோட்டை பாரூக் தலைமையில் அத்த கட்சியினர் மேலப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு அல்வா மற்றும் பக்கோடா கொடுத்து மோடி அரசு எந்தவித வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை எனக் கூறி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டதுடன் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறும் வகையில் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை செயலாளர் பிலால், மாவட்ட பொருளாளர் முகமதுஅலி, மாவட்ட துணை செயலாளர் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மாநில அந்தஸ்து தர முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாஜனதாவுக்கு வாக்களிக்கக்கூடாது.

திருமாவளவன் இறுதி கட்ட பரப்புரையை துவக்கினார்