in

கோலாகலமாக நடந்த அனிதா விஜயகுமார் மகள் திருமணம்…. என்னை அழைக்காதது ஏன்? குமுறிய Vanitha

கோலாகலமாக நடந்த அனிதா விஜயகுமார் மகள் திருமணம்…. என்னை அழைக்காதது ஏன்? குமுறிய Vanitha

தமிழ் படத்தின் மூத்த கலைஞர் ஆன விஜயகுமார் அவர்கள் 1963 ஆம் ஆண்டு முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு அனிதா விஜயகுமார், கவிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் உண்டு.

அதன்பிறகு 1976 ஆம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்ற மூன்று பெண் குழந்தைகள் உண்டு.

மஞ்சுளாவின் மறைவிற்குப் பிறகு தனது முதல் மனைவியுடன் விஜயகுமார் வசித்து வருகிறார். விஜயகுமாரின் மூத்த மகளான அனிதா விஜயகுமார் மட்டும் எந்த திரைப்படங்களிலும் தலை காட்டாமல் மருத்துவராக புரிகிறார்.

அனிதாவை போலவே தியாவும் வெளிநாட்டில் மருத்துவம் படித்துள்ளார், திலன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தியா மற்றும் திலன் திருமணம் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் பீச்சோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

ஒரு வாரமாகவே பந்தக்கால் நடுவதில் இருந்தே ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றுக் கூடி தியாவுக்கு நலங்கு, மெஹந்தி என்று நிகழ்ச்சியை அமர்க்களப்படுத்தி விட்டனர்.

சூப்பர் ஸ்டார் உட்பட பல சினிமா நட்சத்திரங்கள் இந்த திருமணத்திற்கு வருகை தந்தனர். திருமணம் விழாவில் அருண் விஜய்யோடு விஜயகுமார் அவர்கள் இணைந்து ஆடிய நடனம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திருமணத்திற்கு எனக்கு யாரும் அழைப்பிதழும் கொடுக்கவில்லை என்னை அழைக்கவும் இல்லை என்று எப்பொழுதும் போல ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் வனிதா விஜயகுமார் பேட்டி அளித்து தனது குடும்பம் தன்னை ஒதுக்கி வைத்திருக்கிறது என்று தனது ஆதங்கத்தை கொட்டி போஸ்ட் செய்திருக்கிறார் வனிதா.

What do you think?

வாகன ஓட்டுநர் சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம்

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இரண்டே பேர்… அப்பாவின் பெயரை சொல்லலியே …