in

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இரண்டே பேர்… அப்பாவின் பெயரை சொல்லலியே …

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இரண்டே பேர்… அப்பாவின் பெயரை சொல்லலியே …..  

 

இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இரண்டே பேர்… அதிதி சங்கர் வெளிட்ட போஸ்ட்…  அப்பாவின் பெயரை சொல்லலியே …

இயக்குனர் சங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் புதுச்சேரியின் கிரிக்கெட் கேப்டனான வீரர் ரோஹித் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆறே மாதத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் ஆறு மாதங்கள் கூட சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் ரோஹித் மீது உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கருக்கும், தருண் கார்த்திக்கும் விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற உள்ளது.

ஐஸ்வர்யாவின் வருங்கால கணவர் அவரது தந்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், ஐஸ்வர்யாவின் தங்கையான அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கமெராவில் ஷூட் செய்த புகைபடங்களை வெளியிட்டு தன் அக்காவின் திருமண நிச்சையதார்ததை உறுதிபடுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதிதி சங்கர் இந்த உலகத்திலேயே எனக்கு பிடித்த இருவர் இருக்கிறார்கள் என்ற ட்விஸ்ட் டோடு இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களையும் வெளியிட்டார், தனது சகோதரி மட்டும் மற்றும் சகோதரருடன் இணைந்து நிச்சயதார்ததில் சில புகைப்படங்களை எடுத்து இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் எனது அக்காவும் தம்பி அர்ஜித் தான் என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் கலக்கலான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அதிதியின் சகோதரிக்கு தெரிவித்துள்ளார்கள்.

What do you think?

கோலாகலமாக நடந்த அனிதா விஜயகுமார் மகள் திருமணம்…. என்னை அழைக்காதது ஏன்? குமுறிய Vanitha

தல அஜித்தை குற்றம் சாட்டிய… விமர்சகர் அந்தணன்