in

மறைந்தாலும் நின் புகழ் என்று மறையாது போல…. இந்த பொண்ணுகூட மட்டும் நடிக்கவே மாட்டேன்…

மறைந்தாலும் நின் புகழ் என்று மறையாது போல…. இந்த பொண்ணுகூட மட்டும் நடிக்கவே மாட்டேன்…

 

மறைந்தாலும் நின் புகழ் என்று மறையாது போல…. இந்த பொண்ணுகூட மட்டும் நடிக்கவே மாட்டேன்… மறைந்த விஜயகாந்த் அவர்கள்

நடிகர் விஜயகாந்த் மறைந்ததில் இருந்து அவரைப் பற்றிய பல நிகழ்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் மறைந்து மாதங்களை கடந்தாலும் இன்னும் ரசிகர்கள் மற்றும் மக்களின் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

அவர் அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்திருக்கிறார் இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு பெரும் இழப்பு அவர் மறைவிற்குப் பிறகு பல பிரபலங்கள் அவரைப் பற்றிய அவரைப் பற்றி பகிர்ந்த விஷயங்கள் அவரின் பெருமையை மேலும் மேலும் உயர்த்துகிறது.

தற்பொழுது அவரைப் பற்றி நடிகை ஊர்வசி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகை ஊர்வசி ரஞ்சித் தயாரிப்பில் ‘ஜெ பேபி’ என்ற படத்தில் நடித்து சென்ற வாரம் வெளியானது அப்படத்தின் ப்ரோமோஷன் பொழுது நடிகர் விஜயகாந்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

விஜயகாந்த் சார் எப்போதுமே தங்கச்சி என்றுதான் என்னை அழைப்பார். அதனால் என்னுடன் காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். சில படங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தோம்.

ஆனால் ஐயோ என்னால் அந்த பெண்ணுடன் நடிக்கவே முடியாது நான் அவளை தங்கச்சியாக தான் பார்க்கிறேன் என்று சொல்வார். இதனாலே நான் அவருடன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தேன். என்னுடன் நடிக்கும் பொழுது அவர் மிகவும் கஷ்டப்படுவார்.

இப்படி வெள்ளையாக இருக்கிறீர்களே என்று நான் அவரை கிண்டல் செய்வேன் விஜயகாந்த் சார் சமைப்பதிலும் வல்லவர் அவரின் கடைசி படமான தென்னவன் படத்தில் அவருடன் நான் நடித்தேன், அப்பொழுது கிராமங்களில் கிடைக்கும் உணவைப்போல விதவிதமாக எங்களுக்கு உணவை சமைத்துக் கொடுத்தவர்.

விஜயகாந்த் சார் எங்கு சென்றாலும் அவரை தலைவர் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள் நாங்கள் எங்கு சூட்டிங் சென்றாலும் எங்கள் அனைவரையும் காக்கும் ஊர் காவல் காரர் அவர்தான் என்று ஊர்வசி நெகிழ்ச்சியாக கூறினார்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

What do you think?

ஆதீன போலி விடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம்

என் மகளை ஏன் இப்படி கேவலபடுத்துறிங்க …. கண்ணீருடன் அர்ச்சனா