in

வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்


Watch – YouTube Click

வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

 

செங்கம் அருகே பழைய வீடு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட போது திடீரென எதிர்பாராத விதமாக மேல் கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி 4 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பழைய காலணி பகுதியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான தமிழக அரசு வழங்கிய பழைய தொகுப்பு வீட்டினை புதுப்பிக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி, கோவிந்தராஜ், ராஜா, சதிஷ் ஆகிய நான்கு பேர் புதுபிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேல் இடிந்து விழுந்ததில் இடிபாடுக்குள் சிக்கி நான்கு பேரும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்பிலன்ஸ் வாகனம் மூலம் செங்கம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதில் படுகாயம் அடைந்த பெரியதம்பி, கோவிந்தராஜ், ராஜா , ஆகிய மூன்று பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் விபத்து குறித்து செங்கம் காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூரில் சாலை மறியல்

உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்