in

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்


Watch – YouTube Click

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடுமையான கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்புவிழா உப்பளம் தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாநில கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் இளநீர், தர்பூசணி பழங்கள் வழங்கினார்.

இந்த நீர் மோர் பந்தலில் தர்ப்பூசணி, வெள்ளரி பழம், கிர்னி பழ வகைகளும், வெள்ளரிகாய்,நீர் மோர், இளநீர்,நுங்கு உள்ளிட்ட வகைகளும் இடம்பெற்றிருந்தன. அவ்வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் நீர், மோர் மற்றும் பழங்களை வாங்கி பருகி வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனி இடும்பன் திருக்கோயிலில் ஜித் சினிமாஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்திற்கான பட பூஜை

நிலக்கோட்டையில் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் திடீர் தீ