in

புதுச்சேரி அருகே கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி


Watch – YouTube Click

புதுச்சேரி அருகே கிணற்றில் குளித்த வாலிபர்,நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சூர்யா (வயசு 18) இவர் தனது நண்பர்களுடன் சேதராப்பட்டு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

அப்போது சூர்யா முதலில் கிணற்றில் இறங்கி குளித்த போது, சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் பெற்றோர்களுக்கும் சேதராப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் அரை மணி நேரம் போராடி, சூர்யாவின் உடலை மீட்டனர். இதன் அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேதராப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சேதராப்பட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மலர் கண்காட்சிக்காக தயாராகும் பிரையண்ட் பூங்கா

ever கிரீன் பியுட்டி ஸ்டார் நதியா..வின் கணவர் யார் தெரியுமா?