in

செங்கல் சூளையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


Watch – YouTube Click

செங்கல் சூளையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

நத்தம் அருகே சேர்வீட்டில் செங்கல் சூளையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள செங்கல் மற்றும் பொருட்கள் எரிந்து நாசம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பாரதி (40). இவர் சேர்வீடு பகுதியில் சொந்தமாக செங்கல் சூளை (செங்கல் தயாரிக்கும்) நடத்தி வருகிறார். திங்கட்கிழமை மாலை வரை அங்கு இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் திடீரென நேற்று சுமார் 11.30 மணியளவில் செங்கல் கால்வாய் மேல் உள்ள குடிசையில் தீ மளமளவன பரவி தீப்பற்றியது. உடன் அக்கம் பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடன் சம்பவ இடத்திற்கு வீரர்கள் குழுவினர் தீயை 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இதில் செங்கல் சூளையில் இருந்த 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல்கள் மற்றும் குடிசை செட்டுகள், பொருட்கள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

தரமான குடிநீர் வழங்க கோரிக்கை – ஊழியர்கள் போராட்டம்

பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம் – மர்ம நபர்களால் உயிர்வதை