in

தரமான குடிநீர் வழங்க கோரிக்கை – ஊழியர்கள் போராட்டம்


Watch – YouTube Click

தரமான குடிநீர் வழங்க கோரிக்கை – ஊழியர்கள் போராட்டம்

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் பணிமனையில் தரமான குடிநீர் கிடைப்பதில்லை புகார் தெரிவித்து கலங்கலான குடிநீர் பாட்டில்களை வாயில் முன்பு கட்டி வைத்து ஊழியர்கள் போராட்டம்.

திண்டுக்கல் பழனி சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மூன்றாவது கிளை உள்ளது.

இந்தப் பணிமனையில் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மெக்கானிக் என 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு இடையே இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுகாதாரமற்ற முறையிலும் மிகவும் கலங்கலாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு தரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று பலமுறை நிர்வாகத்திடம் ஊழியர்கள் கோரிக்கை வைத்தபோதிலும் அதை மேல் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் இன்று பணிமனை வாயில் முன்பு தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் குடிநீர் அடங்கிய பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதற்கு இடையே இது குறித்து கிளை மேலாளிடம் கேட்டபோது மாநகராட்சி மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீர் கலங்கலாகவே உள்ளது. இதனை விரைவில் சரி செய்ய நடவடிகை எடுக்கிறோம் என தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் காரை வைத்து ஊழியர்களை ஏற்றும் CCTV வீடியோ காட்சிகள் வைரல்

செங்கல் சூளையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்