in

தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி


Watch – YouTube Click

தமிழகத்தில் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே. என். அருண் நேருவை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருச்சி மாவட்டம் மணண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து மண்ணச்சநல்லூர் பகுதியில் செய்த திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்தார்.

‘‘இன்னும் ஐந்து, ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் தகுதி வாய்ந்த 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்,’’ என்று அமைச்சர் உதயநிதி பேசினார்.பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அருணை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர், பேசியதாவது:

தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி சொன்னதை போல், தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதை செய்வார். செய்வதைத் தான் சொல்வார். வாயால் வடை சுடும் பிரதமர் மோடி, அவர் சுட்ட வடையை அவரே சாப்பிட்டு விடுவார். இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால், ஒரு காஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் தருவதாக, ஸ்டாலின் வாக்குறுதி கூறியிருக்கிறார். அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

தி.மு.க., வேட்பாளரை 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து விட்டால், மாதம் இரண்டு முறை பெரம்பலுார் தொகுதிக்கு வந்து, உங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றுவேன்.

நான் கருணாநிதி பேரன், சொன்ன சொல்லை காப்பாற்றுவேன். நீங்கள், நான் அனைவரும் ஈவெ.ரா., அண்ணாத்துரை, கருணாநிதி ஆகியோரின் லட்சிய பேரன்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த குடும்பமும் கருணாநிதி குடும்பம் தான்.
பிரதமர் மோடிக்கு ஒரே குடும்பம், நெருங்கிய நண்பர் அதானியின் குடும்பம் தான். மோடி பிரதமரான பின், அதானி கம்பெனி ஆயிரம் மடங்கு வளர்ச்சியடைந்து, உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்துக்கு வந்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றைக் கூட பொதுத்துறையாக்காத மோடி, பொதுத் துறை அனைத்தையும், அதானியிடம் கொடுத்து விட்டார்.

ஆளுக்கு தகுந்தாற் போல் பேசும் பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் கல்லை துாக்கி காட்டுகிறார், என்று என்னை விமர்சனம் செய்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை, இந்த கல்லை காட்டி ஞாபகப்படுத்திக் கொண்டு தான் இருப்பேன். மத்திய அரசு நிதியில், ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்து விட்டன. கொரோனா பரவலை தடுக்க ஊசி போட வேண்டும், என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் தலைவர் ஸ்டாலின். அவர், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றி உள்ளார்.

தேர்தல் முடிந்தவுடன், ஐந்து, ஆறு மாதங்களில் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் தகுதி வாய்ந்த 1 கோடியே 60 லட்சம் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். இவை அனைத்து நடப்பதற்கு, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புக்கு, ஒரு பைசாக் கூட இழப்பீடு கொடுக்காத பிரதமர் மோடியை, 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும்.

2021ல் அடிமைகளை விரட்டியடித்து, தமிழகத்தில் விடியல் ஆட்சியை கொடுத்தீர்கள். அதே போல், வரும் தேர்தலில், அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

தெலுங்கு மற்றும் தமிழில் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்தார் நடிகை ரோகிணி

மக்கள் ஏமாந்தால் நாங்கள் பொறுப்பல்ல: தினகரன் பேச்சு