in

விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர், ஓட்டுநர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்


Watch – YouTube Click

திண்டிவனம் அருகே உள்ள நல்லாளம் கூட்டுப் பாதையில் எம். சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லாளம் கூட்டு பாதை சந்திப்பில் எம். சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில்காலவரையற்ற வேலை நிறுத்தம்மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு யூனிட் ஜல்லி விலை 1400 ரூபாய்க்கும், ஒரு யூனிட் எம் சான்ட் விலை 2800 ரூபாயுக்கும், பி.சான்ட் 3600 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு யூனிட்டுக்கு 500 ரூபாய் விலை ஏற்றம் செய்தனர். மேலும் நேற்றைய தினம் ரூபாய் விலை ஏற்ற குவாரி உரிமையாளர்கள் செய்தனர் மாதத்திற்கு ஒரு முறை விலை ஏற்றம் செய்வதால் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகிறார்கள் மேலும் இந்த பகுதிகள் வாழும் மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
இதனை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை மேலும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கனிம வளத்துறை அதிகாரிகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. செவிசாய்க்கவும் இல்லை அரசு கவனத்தில் கொண்டு விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் வேலை நிறுத்தத்தை காவல்துறையை வைத்து மிரட்டுவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்

திருச்சி என் ஐ டி யில் பிப் 22 முதல் பிரக்யான் தொழில்நுட்ப விழா