in

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை


Watch – YouTube Click

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மற்றும் செஞ்சி ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை…

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மற்றும் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

இதை முன்னிட்டு செஞ்சி நான்கு முனை கூட்ரோட்டில் இருந்து அமைதி ஊர்வலம் நகர செயலாளர் கார்த்திக் தலைமையில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான்,மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திமுகவினர் அமைதி ஊர்வலமாக சென்று செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள பேரறிஞரின் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் செஞ்சி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர் ஆர். விஜயகுமார் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வணக்கம் செலுத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து

இலங்கை கடற் கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடிப்பு