in

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்


Watch – YouTube Click

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தியின் உருவப்படத்தை கிழித்து பாஜகவினர் எதிர்ப்பு. ராகுல் காந்தி உருவம் பொறித்த பொய் மூட்டையை எரிக்க முயன்ற பாஜகவினருடன் போலீசார் கடுமையான தள்ளுமுள்ளு.பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்…

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தியை கண்டித்தும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாஜக ஓ.பி.சி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓ.பி.சி அணி சார்பில் இந்திரா காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் ராகுல் காந்தியின் உருவ படத்தை கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த பாஜகவினர் மறைத்து வைத்திருந்த ராகுல் காந்தியின் பெயருடன் உருவம் பொறிக்கப்பட்ட பொய் மூட்டையை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அதை பறிமுதல் செய்தனர். இதனால் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்டிக்கும் விதமாக ராகுல் காந்தியை அவமரியாதை செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி,முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டிஜிபி சீனிவாசை சந்தித்து மனு அளித்தனர்.
பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி அல்ல.இது தான் உண்மை.இதற்கான விளக்கத்தை தர பாஜகவினர் வேண்டுமே தவிர ராகுல் காந்தியை இழிவுப்படுத்த கூடாது.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக சார்பில் மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்

முகநூலில் திமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் கைது