in

முகநூலில் திமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் கைது


Watch – YouTube Click

முகநூலில் முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்ட திருவாரூர் மாவட்ட பாஜக  பிரமுகர் கைது

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞரான சதா சதீஷ் என்பவர் திருவாரூர் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வருகிறார்.இவர் தமிழக முதல்வர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் என்பவர் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல்துறையினர் சதா சதீஷ் மீது திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புதல் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்குதல் போன்ற நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து சதா சதீஷை கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மேற்பார்வையில் திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் மோகன் உதவி காவல் ஆய்வாளர் பாரத நேரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் கருத்துக்களை பதிவிட்ட சதா சதீஷ் பிஜேபி என்கிற முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து சதா சதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்

மலர் கண்காட்சியில் நடைபெற்ற அழகு நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி