in ,

நியோமேக்ஸ் வழக்கு மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு


Watch – YouTube Click

நியோமேக்ஸ் வழக்கு மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு

அதிக வட்டி தருவதாக கூறி தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன நிறுவனர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை முடக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ADGP மற்றும் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியை சேர்ந்த ஜெயப்பிரகாசம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், காரைக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன்.

எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சபரீஸ் என்பவர் தான் நியோமேக்ஸ் கம்பெனியில் டீம் லீடராக முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் எனக்கூறி காரைக்குடியை சேர்ந்த நாகராஜ் அவரது மனைவி மஞ்சுளா அஞ்சல்துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோரை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் கூட்டம் நடைபெறுவதாக கூறி காரைக்குடி அருகில் உள்ள மிகப்பெரிய விடுதிக்கு அழைத்து சென்று நாகராஜ், நாகராஜ் மனைவி மஞ்சுளா, கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் என்னிடம் நியோமேக்ஸிலில் முதலீடு செய்ததால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினர்.

தானும் அதனை நம்பி கடந்த 2022-ம் ஆண்டு எனது வீட்டை 21 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்து ரூபாய் 12 லட்ச ரூபாயை நியோமேக்ஸ்க்கு துணை நிறுவனமான ரோபெல்லோ ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தேன்.

தொடர்ந்து என்னிடம் என் நண்பர்களையும், உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்தால் அதிக லாபம் பணம் ஈட்டலாம் எனக்கூறியதை நம்பி, 17 பேரை முதலீடு செய்ய வைத்தேன். 17 பேரும் சுமார் 70 லட்சம் வரை முதலீடு செய்தனர்.

இந்நிலையில் தான் நியோமோக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக வழக்கு பதிந்த செய்தி தெரிய வந்தது. தொடர்ந்து நாங்கள் பணத்தை திருப்பி கேட்டபோது நிறுவனத்தின் மீது எவ்வித புகாரும் கொடுக்கவேண்டாம் என்றும், புகார் கொடுத்தால் எவ்வித பணமும் திரும்ப கிடைக்காது என்றும், விரைவில் பணத்தை திரும்பி செலுத்துவதாகவும் கூறினர்.

ஆனால் இன்றுவரை எங்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. எங்களிடம் ரூபாய் 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை பதிந்து தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து பணத்தை திருப்பி தரமாலும் நிலத்தை பதிவு செய்து தராமலும் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த நியோமேகஸ் குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்ட்களாக செயல்பட்ட நாகராஜ், அவரின் மனைவி மஞ்சுளா, கார்த்திக் மற்றும் அவரது மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களின் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சக்தி சுகுமார குரூப் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து 18 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

மேலும் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ADGP மற்றும் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Watch – YouTube Click

What do you think?

அமெரிக்க அதிபர் தேர்தலில்வெல்ல போவது யார்? ஜோ பைடன் – டிரம்ப் நேரடி மோதல்

அடுத்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு