in

தேர்வு நடைபெறும் மையங்களில் வசதிகளை முறையாக வழங்கிட மாவட்ட ஆட்சியர் உத்தரவு


Watch – YouTube Click

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நெல்லை மாவட்டத்தில் 70 மையங்களில் 20814 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர்கள் ஸ்மார்ட் போன் கொண்டு செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடந்து வருகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 25.03.24 வரையிலும் நடைபெறுகிறது

.திருநெல்வேலி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் 28 தேர்வு மையங்களும், வள்ளியூரில் 29, சேரன்மகாதேவி 12 என மொத்தம் 69 தேர்வு எழுதும் மையங்கள் உள்ளன. இதில் தனித்தேர்வர்கள் தேர்வெழுதும் மையம் மத்திய சிறைவாசி தேர்வு மையம் உள்ளிட்டவைகள் சேர்த்து மொத்தமாக மூன்று கல்வி மாவட்டத்திலும் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 20,172 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் 8,853 மாணவர்கள், 11,319 மாணவிகள் ஆவர்.தேர்வை கண்காணிக்க பறக்கும் படை குழுவில் 125 ஆசிரியர்களும், சிறப்பு பறக்கும் படை குழுவில் 16 ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளராக 1328 ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 1963 ஆசிரியர்கள் இந்த பொது தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வு எழுத வருபவர்கள் கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற வெளி நபர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வு மையங்களில் தேர்வு கண்காணிப்பாளர் உட்பட அதிகாரிகள் ஆசிரியர்கள் என யாரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் உள்ள தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்கிடவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்


Watch – YouTube Click

What do you think?

அடிக்கல், மற்றும் முடிவுற்ற கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் துவக்கி வைப்பு

காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவனுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா