in

தணிக்கை குழு மீது காண்டான பா ரஞ்சித்

தணிக்கை குழு மீது காண்டான பா ரஞ்சித்

 

இந்த இயக்குனர் எப்படி படம் எடுத்தாலும் எதை சொன்னாலும் சர்ச்சை தான் என்று முத்திரை குத்தப்பட்ட இயக்குனர். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்.

இவர் தற்பொழுது ‘விக்ரம் நடிக்கும் தங்களான்’ படத்தை இயக்குகிறார். இவர் தன் சொந்த தயாரிப்பில் சில படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளிவந்த ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படம் திரைக்கு வந்து ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரிதிவி, கீர்த்தி பாண்டியன் போன்றோர் நடித்துள்ளனர். ப்ளூ ஸ்டார் பட விழாவில் ரஞ்சித் அவர்கள் தணிக்கை குழுவை கடுமையாக சாடினார் ப்ளூ ஸ்டார் படத்தை வெற்றி பெற வைத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி.

நான் என் அரசியலை எப்போது நம்புகிறேன் அதை புரிந்தவர்கள் என்னுடன் இருக்கிறார்கள் எனது தயாரிப்பில் வரும் படங்கள் அனைத்திற்கும் பல பிரச்சனைகளை தணிக்கை குழு கொடுக்கிறது படம் வெளியாக கூடாது என்று தணிக்கை குழு எனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

உங்கள் படங்களில் சில பிரச்சினைகள் இருக்கிறது, ரொம்ப கம்யூனராக இருக்கிறது என்று தெரிவித்தார்கள் அதன் பிறகு மேல்முறையீட்டு குழுவுக்கு விண்ணப்பித்தோம் அதில் சில பெயர்களை மாற்றம் செய்ய சொன்னார்கள் ஒரு படத்தில் வேறுபாடு இருக்கக் கூடாது எல்லோரும் சமம் என்று சொல்கிறது.

இந்த கருத்துக்கு மாற்று கருத்து உள்ள ஆட்கள் தணிக்கை குழுவில் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

What do you think?

திமுக கூட்டணியில் கமல்

நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் விவாகரத்து.. பரபரப்பு வாக்குமூலம்