in

சாத்தூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லோடு வேன் மோதி விபத்து


Watch – YouTube Click

சாத்தூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லோடு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம் விபத்து ஏற்படுத்திய லோடுவேன் ஓட்டுனர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலை கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ஸ்ரீ ஐயப்பா நிறுவனத்தின் சார்பில் கடந்த ஒரு வாரமாக ஐந்து பேர் கொண்ட குழு செல்போன் டவர் பணி செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் தங்களது காரில் மேட்டமலை அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டு பணி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேட்டமலையைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மணிகண்டன் லோடு வேன் ஓட்டி வந்தபோது வேன் நிலை தடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரின் அருகே நின்று பணியாற்றிக் கொண்டிருந்த சிவகாசி அருகில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்து (25) என்பவர் அடித்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவருக்கு லேசான காயம் அடைந்தார்.இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த வரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சேர்த்தனர்.

மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் உயிரிழந்த முத்துவின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து ஏற்படுத்திய லோடு வேன் ஓட்டுநரான மேட்டமலையைச் சேர்ந்த மணிகண்டனை நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

பாஜக சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி