in

விழுப்புரம் முழுவதும் மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு


Watch – YouTube Click

விழுப்புரம் முழுவதும் மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு

 

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வரும் மார்ச் 8 தேதி மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை முன்னிட்டுஅனைத்து துறை அலுவலர்களுடன் மாசி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேல்மலையனூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி கலந்து கொண்டு அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்துஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்ற விழா, 9ஆம் தேதி மயான கொள்ளை விழா,மார்ச் 12 ஆம் தேதி தீமிதி விழாவும், மார்ச் 14 திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது .

இந்த முக்கிய திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட ஆந்திரா கர்நாடகா பாண்டி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி ஆலோசனை நடத்தினார்.

மேலும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், குடிநீர், கழிவறை வசதிகள், தடையில்லா மின்சார வசதி, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மார்ச் 14ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு மார்ச்23 -ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம்,கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பாஜக நோட்டாவுடன் போட்டி போட்டு அதைவிட குறைந்த வாக்குகள் பெறும்

மிஸ் இந்திய போட்டியில் வென்ற அழகி மரணம்