in

இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரைவைகோ பேட்டி


Watch – YouTube Click

இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரைவைகோ பேட்டி

 

திருச்சியில் போட்டியிட வாய்ப்பு அளித்த வைகோ அவர்களுக்கும் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கூட்டணி கட்சி நறுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரடி அரசியலுக்கு வந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக தேர்தல் போட்டியிடுகிறேன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு உத்வேகமோ, மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது அதேநேரம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற வைத்தால் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கடமை, வேலைப்பளுவை நினைத்து கவலைப்படுகிறேன்.

திமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்றபின்னர் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை குறைக்கப்படும் மற்றும் சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டம் ரத்து செய்யப்படும், இது மக்களிடையே மற்றும் தாய்மார்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தும், ஒரு மக்களிடம் ஹீரோவாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தேர்தலுக்காக பாஜக இரண்டு ரூபாய் பெட்ரோல் டீசல் விலை குறைத்துள்ளது, கேஸ் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது.

கொரோனா காலத்திற்குப் பின்னர் மீண்டு தமிழக வந்துள்ளது, நிதி நெருக்கடியிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு முடிந்தவரை செய்து வருகிறது மத்திய அரசு இப்போது நிதி அளித்து ஒத்துழைப்பு அளித்தால் கூடுதலாக பணியாற்றி இருக்க முடியும், மத்திய அரசில் மாற்றம் வந்தால் மேலும் சிறப்பான பணிகளை செய்ய முடியும்.

புதிய விமான நிலையம் திறந்து பல மாதங்கள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது போல திருச்சியும் விமான நிலையம் வரவில்லை, ஓடுதளம் விரிவாக்கம் செய்ய எந்த முன்னேற்றமும் இல்லை, நகரங்களின் கட்டமைப்புகளை சீரமைக்கவும் மேம்பாலம் மற்றும் சாலைகள் அமைக்கவும் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தை விரிவாக்க மற்றும் செய்ய பல திட்டங்களை கொண்டு வர உள்ளோம், விவசாயிகள் நலனுக்காக காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தவும், பொன்மலை ரயில்வே பணிமனையில் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி மேற்கொள்ளவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பெல் நிறுவனத்தினை சிறப்பாக செயல்பட கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சாத்தியப்படாததை அதை செய்வேன் என சொல்ல மாட்டேன்.

நான் எல்லா ஊருக்கும் சமமானவன், தமிழக மக்கள் அனைவருக்கும் கடமைப்பட்டவன் எங்களுக்கு மூன்று சீட்டு கிடைத்தால் வேறு எங்கேயாவது நிற்க வாய்ப்பு இருந்திருக்கும், ஒரு சீட்டு கிடைத்ததால் திருச்சியில் நிற்கிறேன், அமைச்சர்களைக் கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வேன்.

சின்னம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் பதில் தருவார்கள் என எதிர்பார்க்கிறோம், பம்பரம் கிடைக்காவிட்டால் போது சின்னத்தில் போட்டியிடுவோம்.

ஐடிசி விநியோகஸ்தராக இருந்து கொண்டு எவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது துரை வைகோ அருகில் இருந்தவர்கள் கோபப்பட்ட நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி விட்டு பின்னர் துரை வைகோ செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார்.

ஐடிசி விநியோகஸ்தராக 2000 முதல் 2016 வரையிலும் இருந்தேன், மதுவை எதிர்த்து போராடும் வைகோவின் மகன் எப்படி புகையிலை விற்க முடியும் என்ற அனைவரும் கேட்டதால் அதனை ராஜினாமா செய்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார். வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை போன்றவைகளாக உள்ளது, இந்தியா முழுவதும் பாஜகவை எதிர்க்கும் இயக்கங்கள் மீது சோதனை நடைபெறுகிறது அதன் வாயிலாகவே விஜயபாஸ்கர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு விட்டது புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தென்காசி பாராளுமன்ற வேட்பாளருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு