in

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தென்காசி பாராளுமன்ற வேட்பாளருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு


Watch – YouTube Click

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தென்காசி பாராளுமன்ற வேட்பாளருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சங்கரன்கோவில் சென்ற திமுக வேட்பாளர் ராணிக்கு மாவட்ட எல்லையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடைபெற இருக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர்களை நேற்று கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து தங்களின் சொந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் வந்த திமுக வேட்பாளர் டாக்டர் ராணி தனது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு திரும்பினார். மதுரையிலிருந்து கார் மூலம் தனது சொந்த ஊருக்கு செல்லும்போது விருதுநகர் மாவட்ட எல்லையில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிந்து உற்சாகமாக வரவேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரைவைகோ பேட்டி

விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு