in ,

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் …


Watch – YouTube Click

பிரதோஷ வழிபாட்டிற்காக சதுரகிரி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் …

பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டது.குறிப்பாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 10 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் காலை 6 மணி முதல் அனுமதிக்குப்பட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு மாலை சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிசேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டது. மேலும் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

80 ஆண்டு கால கனவு நிறைவேறியது இப்போது தான் உண்மையான சுதந்திரம்

புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை