in

கதைக்கு பஞ்சம் வந்துவிட்டது…ஆவேசத்துடன் நடிகர்

கதைக்கு பஞ்சம் வந்துவிட்டது…ஆவேசத்துடன் நடிகர்

தமன் குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு நொடி என்ற படத்தில் எம்.எஸ். பாஸ்கர் வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விழாவில் நடிகர் ஆரி பேசும்போது நடிகர்களுக்கு பட வாய்ப்புகளை தேடி ஓடுவது போராட்டமாக இருக்கிறது.

தயாரிப்பாளர் அழகர் நிறைய பேரின் கனவை நினைவாக்குபவர்…சினிமா துறைக்கு தேவை. சிறு பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள் என்று விஷால் நல்ல நோக்கத்துடன் சொன்னதை தவறாக புரிந்து கொண்டவர்கள் அவரை விமர்சனம் செய்கிறார்கள்.

சிறிய படம் பெரிய படம் என்று வித்தியாசம் இல்லை நல்ல கதை அம்சம் உள்ள படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதுமே வரவேற்பு உண்டு.

சினிமாவில் கதை தான் ஹீரோ சினிமாவில் எழுத்தாளர்கள் குறைந்ததால் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதால் டைரக்டர்கள் கொண்டு வரும் கதையையே படம் ஆக்குவதை தவிர்க்க எழுத்தாளர்கள் மேலா நடத்தி அவர்களிடமிருந்து கதைகளை பெற்று படம் எடுக்கலாம் என்ற யோசனையை ஆரி கூறியுள்ளார்.

இயக்குனர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற இவரின் கோரிக்கை வரவேர்க்கவுள்ளது .

What do you think?

அரசியல் சூழ்ச்சி… சாட்டிலைட் உரிமையை வாங்க மறுக்கும் முன்னணி சேனல்கள்…திணறும் வெங்கட் பிரபு

வாரிசு நடிகர்கள் அராஜகம் செய்கின்றனர்.. நடிகை குற்றசாட்டு