in

பொதுமக்கள் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


Watch – YouTube Click

வேடசந்தூர் அருகே முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி பொதுமக்கள் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மாலை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்

அப்போது வாக்காளர்கள் இடையே பேசிய அவர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் இளம்பெண் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரை குறைவாக பேசியதாக கூறி ஊர் பொதுமக்கள் திடீரென வேடசந்தூர் அடுத்துள்ள கோவிலூர் ராமநாதபுரம் என்னும் இடத்தில் ஜோதி மணியின் காரை சிறை பிடித்தனர்

பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அவரின் காரை நகர விடாமல் சிறை பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்

பின்னர் ஜோதி மணியுடன் வந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்

சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த வாக்குவாதமானது சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் ஜோதி மணியின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Watch – YouTube Click

What do you think?

உழவர் சந்தையில் நீராபானம் ,மாம்பழம் வியாபாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர்

பாஜக 400 இடங்களை பெறும் காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்