in

மனக்கசப்பை மறந்து சேரனின் மகளை வாழ்த்திய பார்த்திபன்


Watch – YouTube Click

மனக்கசப்பை மறந்து சேரனின் மகளை வாழ்த்திய பார்த்திபன்

தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குனர்கள் என்றால் பார்த்திபனும் இயக்குனர் சேரனும் தான்.

இவர்களுக்கு ரசிகர் மத்தியில் எப்பொழுதுமே நற்பெயர் உண்டு ஆனால் தற்பொழுது இவர்கள் கைவசம் படங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர்கள் மேல் இருந்த மரியாதை மட்டும் குறையவில்லை.

இவர்கள் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது திறமைசாலிகள் இருவரும் ஒருவர் ஒருவரை பக்குவம் இல்லாமல் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் பாரதிகண்ணம்மா மற்றும் வெற்றி கொடி கட்டு என்ற இரண்டு படத்தையும் பார்த்திபனை கதாநாயகனாக வைத்து இயக்கினார்.

இந்த இரண்டு படங்களும் தேசிய விருதை பெற்ற நிலையில் வெற்றி கொடிகட்டு என்ற படத்தில் வடிவேலுவின் காமெடி தான் ஹைலைட். பார்த்திபன்….. வடிவேலு சம்பந்தப்பட்ட சில நகைச்சுவை காட்சிகளை நான் எழுதியிருக்கிறேன் படத்தில் சேர்த்துக் கொள்ளலாமா என்று சேரனிடம் கேட்க எங்கே படத்தின் பெயர் பார்த்திபனுக்கு சென்று விடுமோ என்று நினைத்த சேரன் அதை மறுக்க வடிவேலும் பார்த்திபனும் சேரனிடம் பேசி அவரை ஒத்துக் கொள்ள வைத்தனர்.

படம் வெளியான பிறகு சூப்பர் ஹிட் …ஆகி சேரனுக்கு தேசிய விருது கிடைத்தது அப்பொழுது ஒரு பட விழாவில் சேரன் நான் அண்மையில் ஒரு குப்பை படம் பார்த்தேன் அது பார்த்திபன் படமா இருக்குமோ என்று எண்ணினேன் என்று சேரன் பேசியதற்கு இருவரும் மாறி மாறி சண்டை போட்டு மனக்கசப்பு ஏற்பட்டது.

பல வருடங்களாக கருத்து வேறுபாடு நீடித்த நிலையில் இயக்குனர் சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினி…இக்கு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடக்க திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்த போது தனது மனக்காசப்பை மறந்து சேரனின் மகளை வாழ்த்தி பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவு போட மகிழ்ச்சி நன்றி என்று சேரனும் பதில் போஸ்டு போட்டிருக்கிறார்.

சண்டையில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும் சமாதானத்தில் இருவரும் வெற்றி பெறலாம்.


Watch – YouTube Click

What do you think?

நாமக்கல் பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா

தீடிர் என்று காணாமல் போன சீரியல் நடிகை ஜூலி….