in

பட்டாக்கத்தியால் கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்


Watch – YouTube Click

பட்டாக்கத்தியால் கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாக்குறிச்சி சாலை பாரதிதாசன் நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் அப்துல் சலாம் வயது 62. இவர் அதே பகுதியில் பிளவர் மில் நடத்தி வருகிறார் இந்நிலையில் இன்று காலை பாப்பாக்குறிச்சி சாலையில் வந்து கொண்டிருந்த அலுமினிய பாத்திர பாத்திர தள்ளு வண்டி மீது மர்ம நபர் ஒட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் பாத்திரங்கள் சாலையில் சிதறியது. இதையடுத்து அருகில் இருந்த அப்துல் சலாம் விபத்தை ஏற்படுத்திய டூவீலர் ஓட்டி வந்த நபரை பிடித்து கண்டித்துள்ளார்..

அதற்கு அந்த மர்ம நபர் தான் வைத்திருந்த பட்டாக்கத்தியால் அப்துல் சலாமை கையில் கிழித்து விட்டு அவர் ஓட்டி வந்த டூவீலரையும் விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதில் அப்துல் சலாம் காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டூவீலரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் கஞ்சா மற்றும் போதை ஊசி புழக்கம் அதிகமாக இருப்பதால் வாலிபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கவனத்தில் கொண்டு கஞ்சா மற்றும் போதை ஊசி புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

வழிப்பறி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் விரட்டி சென்றபோது காலில் எலும்பு முறிவு

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரம்