in

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி


Watch – YouTube Click

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி மேலும் இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிர்மலாதேவி. கடந்த 2018 ஏப்ரல் 15ம் தேதி அதே கல்லூரியில் பயிலும் மாணவியரை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி தமிழக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

கடந்த 2018 ஆம் ஆண்டு 16ஆம் தேதி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றி தமிழக அரசு அறிவித்தது

ஏப்ரல் 24ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார் அதனை தொடர்ந்து 25 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில்

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஓர் ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்ப முறைகேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

11 மாத சிறைவாசத்திற்கு பின் கடந்த 12.03.2019 அன்று பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
மேலும் நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்ககூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

2018 ஜூலை – 13ம் தேதி அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 1160 பக்கம் கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீஸ் சார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்

மேலும் 2018 செப்டம்பர் 7 ம் தேதி இரண்டாவது கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்

மொத்தமாக 3 பேருக்கு எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் நிர்மலா தேவி பேசிய ஆடியோ உரையாடல் மற்றும் முருகன் கருப்பசாமி ஆகியோரிடம் செல்போனில் பேசிய கால் ஹிஸ்டரி, வாட்ஸ் அப்பில் மாணவிகளிடம் உரையாடிய பதிவுகள், சம்பந்தப்பட்ட மாணவியரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் நிர்மலாதேவி கருப்பசாமி முருகன் மற்றும் மாணவிகளின் செல்போன்கள் நிர்மலா தேவியின் குரல் சோதனை பதிவு ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இவ்வழக்கின் எதிரிகளாக கருதப்படும் பேராசிரியை நிர்மலாதேவி உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் என சுமார் 120 பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது

மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முதல் குற்றவாளி பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்தார் மேலும் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாம் குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி வழக்கறிஞர் தண்டனை விவரங்கள் குறித்து ஒரு கோரிக்கை வைத்தார் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் என் கட்சிக்காரர் தொடர்புடையது அல்ல எனவும் எனவே தண்டனையை குறைக்க வேண்டும் எனவும் இதுகுறித்து சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினர் அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தீர்ப்பு விவரங்களை இன்றே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது


Watch – YouTube Click

What do you think?

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா

அருட்பிரகாச வள்ளலார் திருக்கோவிலின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா