in

 குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்


Watch – YouTube Click

 குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

 

முசிறி அருகே அருகே அழகரை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் அழகரை ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு அக்ரஹாரம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

காவிரி குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், காலி குடங்களுடன் மணமேடு – பவித்திரம் சாலையில் அழகரை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்ப இடத்திற்கு சென்ற தொட்டியம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், அலகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா மற்றும் போலீஸார் சம்பவயிடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விரைவில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மணமேடு – பவித்திரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


Watch – YouTube Click

What do you think?

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பேட்டி

துறையூர் அருகே பெருமாள் பாளையத்தில் சொத்து தகராறு