in

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தாய் சேய் திடீர் உயிரிழப்பு


Watch – YouTube Click

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தாய் சேய் திடீர் உயிரிழப்பு

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

புதுச்சேரி தவக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி தீபா வயது 26, நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த 1-ம் தேதி பிரசவத்திற்காக எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு 12-ம் தேதி பிரசவம் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இந்த நிலையில் திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அழைத்துச் செல்லப்பட்டு நேரத்தில் தாயும் சேயும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீபாவின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவர்களின் தவறான சிகிச்சையாலும் கவனக்குறைவாளுமே தாய் சேய்  இறந்ததாக குற்றம்சாட்டி மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார் பேட்டை போலீஸ் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர், உடல்கூறாய்வு பரிசோதனை ஜிப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மருத்துவ அறிக்கை வந்தவுடன் தாயும் சேயும் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து மரியலை கைவிட்ட பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிறை மாத கர்ப்பிணி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் இறந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சாட்டை துரைமுருகனிடம் என்ஐஏ விசாரணை

பாதுகாப்பு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி