in

செஞ்சி அருகே ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது


Watch – YouTube Click

செஞ்சி அருகே ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

 

செஞ்சி அருகே ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் பலி- ஏழு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்னையிலிருந்து சத்யாவின் குடும்பத்தினர் 9 பேர் ஆட்டோவில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று மீண்டும் சொந்த ஊரான ஈச்சூர் கிராமத்திற்கு திரும்பிய போது கப்பையில் ஆட்டோ ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் யுவராஜ், சத்யா, ருத்ரகுமார், பாஞ்சாலி, அம்முச்சி, ஆகாஷ், பொன்னி 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்- குழந்தைகள் பிரித்தீஷ், ஹரி பிரசாந்த் ஆகியோர் கிணற்றில் மாயமாகியுள்ளதை செஞ்சி தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் 7 பேர் செஞ்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இந்த சம்பவம் செஞ்சி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ரூ 56 47 கோடி மதிப்பிட்டில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி

விரைவில் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளிவரும் ஹாரி பாட்டர்