in

இந்த முடிவை எடுக்கும் தைரியத்தை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி

இந்த முடிவை எடுக்கும் தைரியத்தை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி

அண்மையில் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயே திருமணம் செய்து நடிகை டாப்ஸி. தற்போது ஹிந்தி திரை உலகில் பிஸியாக இருக்கிறார்.

நயன்தாரா போலவே இவரும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பவர். ஹிந்தி உலகில் தனது சினிமா அனுபவம் பற்றி கூறியதாவது.

தற்போதைய காலத்தில் சினிமாவைப் பற்றிய ரசிகர்களின் எண்ணங்கள் மாறிவிட்டது. கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

டாப் ஹீரோக்களின் படங்களை ஆதரிக்கும் நிலைமையும் எங்கே இல்லை வலுவான கதை அம்சம் கொண்ட கதாநாயகிக்கு முக்கியம் கொடுக்கும் படங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

கதாநாயகிகளை மையமாகக் வைத்து எடுத்த பல படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படி எங்களுக்கு மரியாதை கொடுக்கும் இந்தி சினிமா துறையில் எனது பயணத்தை நான் நீடிக்க விரும்புகின்றேன்.

அப்படிப்பட்ட முடிவை எடுக்கும் தைரியத்தை கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி இந்த மாற்றம் எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என்கிறார்.

சில நாட்களாக பாலிவுட் நடிகைகள் இந்தி திரை உலகை கழுவி ஊற்றி வர இவர் என்னவோ இந்தி துறையை ஆகா ஓகோ என்று புகழ்கிறார்.

தமிழில் வாய்ப்பில்லைஅதான் சங்கதி. நயன்தாராவுக்கு போட்டியாக இந்தியில் இறங்கி இருக்கும் டாப்ஸி ஜெயிப்பாரா பார்ப்போம்.

What do you think?

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியது ஏன்?

யுனிசெப்…பின் இந்திய தூதராக தேர்வு செய்யபட்ட நடிகை