பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பல்வேறு கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் .
இதனையொட்டி தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தத்தங்குடி பொரும்பூர் மேல மங்கநல்லூர் கழனிவாசல் மங்கைநல்லூர் பகுதிகளில் திறந்த வேனில் நின்றப்படி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் .
அவருடன் திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகளும் கட்சி தொன்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்


