in

புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க மனு


Watch – YouTube Click

புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க மனு

 

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மீன்பிடி தடைக்காலம், பெருமழைக்காலத்தில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இவ்விரு திட்டங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.நம் அண்டை மாநிலமான தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.8000-ம், மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6000-ம் என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இவ்விரண்டு திட்டங்களில் தங்கள் தலைமையிலான புதுச்சேரி அரசானது மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.6,500-ம், மழைக்கால நிவாரண உதவித் தொகையாக ரூ.3000-ம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் குறைந்தபட்ச கீழ் நிலை தொழிலாளர்களுக்கு ரூ.320 தினக்கூலியாக வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும் மீன்பிடி தடைக்காலத்திற்கு 61 நாட்களுக்கு 19 ஆயிரத்து 520 ரூபாய் இழப்பீட்டு தொகையாக அரசு வழங்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக்காலத்திற்கு ரூ.6500 வழங்குகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்படும் மீன்பிடி தடைக்காலத்திற்கு, மத்திய அரசும் நம் மாநிலத்திற்கும் நிதியுதவி அளிக்கிறது.

புதுச்சேரி பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக மீனவ கிராமங்களான கோட்டகுப்பம், பெரிய முதலியார்சாவடி, தந்திரயான்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8000-ம், மழைக்கால நிவாரணம் ரூ.6000-ம் வழங்கும் போது, நாம் அவர்களை விட குறைந்த மானிய உதவி வழங்குவது சரியானது அல்ல.

எனவே முதலமைச்சர் அவர்கள் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியாக ரூ.10,000-ம், மழைக்கால உதவித்தொகையை ரூ.6000-ம் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து இவ்வாண்டிலேயே உயர்த்திய நிவாரண உதவியை தாங்கள் அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

உழவர் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி பலத்த காயங்களுடன் சிகிச்சை