in

சத்யஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு


Watch – YouTube Click

சத்யஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு

 

வடலூர் சத்யஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு

கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபை பெருவெளித்திடலில் சர்வதேச மையம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினார்கள் சன்மார்க்க அன்பர்கள் அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்கள் அரசு சத்தியஞான சபை பெருவழித்திடலில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் மீறி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் பெருவெளித்திடலில் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பாமகவினர் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பீச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் வரவழைக்க பட்டுள்ளது இதனால் வடலூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


Watch – YouTube Click

What do you think?

விவசாயிகளுக்கு டிப்ஸ் கொடுத்த அமைச்சர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் புதிய கட்டிடம் 9.5 கோடி ரூபாய்