in

பண பலம், அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று பி.ஜே.பி நினைக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு


Watch – YouTube Click

பண பலம், அதிகார பலத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று பி.ஜே.பி நினைக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு

 

புதுச்சேரி பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் மனைவியை பிஜேபியில் இணைத்து இருக்கிறார்கள், அந்த இணைப்பு விழாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன் அங்காளன், வி. பி. ராமலிங்கம் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்று உள்ளார்கள்.

மர்டர் மணிகண்டனுக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி….

பிஜேபி குற்றவாளிகளின் கூடாரமாக திகழ்கிறது, குற்ற பின்னணி உள்ள ஒருவரின் மனைவியை சேர்த்த பாஜகவினருக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளிக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் அதிபர்களையும், தொழிலதிபர்களையும் ,மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டிய நாராயணசாமி

ரவுடிகள், போலீசார், பணபலம் அதிகார பலம் ஆகியவற்றை வைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பிஜேபி-யினர் நினைக்கிறார்கள் இது மக்கள் சக்தி முன்பு எடுபடாது என்றார்.

கடந்த தேர்தலில் 2-லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம் இந்த தேர்தலில் 3-லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த நாராயணசாமி

பிரதமர் மக்கள் நலனுக்காக தமிழகம் வரவில்லை அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறார் அவரது வருகையால் பாஜகவிற்கு வாக்குகள் குறையுமே தவிர அதிகரிக்காது என்றும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

கோயில் நிதியை முறைகேடாக செலவு செய்ததாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் புகார் அளித்தார்

இந்தியாவில் உள்ள குடிமக்களின் வாழ்வாதாரம் 10 வருடங்களாக சவக்குழிக்குள் சென்று விட்டது